Thursday 31 December 2015

நூல் அறிமுகம் - நேர்பக்கம் - ஒரு பதிவு


ஒன்பதாவது நிகழ்வாக "நூல் அறிமுகம் - நேர்பக்கம்" டிசம்பர் 19 அன்று திருவான்மியூர் பனுவல் புத்தக நிலைய அரங்கில்

சிறப்பாக நிறைவேறியது.





இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் கிருபாநந்தன் அனைவரையும்  வரவேற்று நிகழ்ச்சியைத்  தொடங்கிவைத்தார்.

நூலினை அறிமுகம் செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவர்கள்

ப்ரியாராஜ்  


லதா ராமகிருஷ்ணன்        

             க்ருஷாங்கினி

உமா பாலு 



நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக  திரு அசோகமித்திரனின் உரை திகழ்ந்தது



நேர்பக்கம் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் அழகிய சிங்கர்
 புத்தகம் தயாரிக்கப்பட்ட கதையினையும் கூறி, இன்னும் பல கட்டுரைகள்  தொடர்ந்து வரும் என்றும் தெரிவித்தார்.

இம்மாத கவிதைகளை
வேணு குணசேகரன் அவர்களும் 

உமா பாலு அவர்களும்
  அளித்தார்கள்,  

இம்மாதக் கதையினை  திரு சுந்தரராஜன் 
  வாசித்தார்

திரு சுந்தரராஜனின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


ஒன்பதாவது நிகழ்வு -அறிவிப்பு


 குவிகம் இலக்கிய வாசலின் ஒன்பதாம் நிகழ்வு

புத்தக அறிமுகம் 
அழகிய சிங்கரின்
"நேர் பக்கம்"

சிறப்புரை திரு அசோகமித்திரன்

அறிமுக உரை :                ப்ரியா ராஜ், லதா ராமகிருஷ்ணன்,
                                              உமா பாலு மற்றும் கிருஷாங்கினி

ஏற்புரை               :                   நூலாசிரியர் அழகிய சிங்கர்   


                                  தொடர்ந்து கலந்துரையாடல்

இம்மாத கதை மற்றும் கவிதை வாசிப்பும் வழக்கம் போல் 

அனைவரும் வருக 

பனுவல் புத்தக நிலையம்,எண். 112, திருவள்ளுவர் சாலைதிருவான்மியூர் சென்னை  600041 19  டிசம்பர்  2015 
சனிக்கிழமை,
மாலை - 6.30 மணி

( திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில் -   BOMBAY DYEING SHOW ROOM அருகில்)


Sunday 22 November 2015

பாண்டிய நெடுங்காப்பியம்- வரலலாற்றுப் பின்னணி - எட்டாவது நிகழ்வின் பதிவு


எட்டாவது நிகழ்வு 

பாண்டிய நெடுங்காப்பியம் - வரலாற்றுப் பின்னணி - ஒரு பதிவு


குறிப்பிடத்தக்க சமீத்திய சரித்திர நாவலின் ஆசிரியை திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் பங்கு பெற்ற நமது எட்டாவது நிகழ்வு 21.11.2015 அன்று பனுவல் புத்தக நிலைய அரங்கில் நிறைவேறியது.

திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்.

இம்மாதக் இம்மாதக் கதையினை கீதா அவர்கள் வாசித்தார்கள்

.
இம்மாதக் கவிதை அளித்தவர் சாந்தி 

  

விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுத்தாளர் அறிமுகம் வாசித்தார்


சுருக்கமாக எனினும் ஆழமான தன் உரையில் ஸ்ரீஜா வெங்கடேஷ் தனது அனுபவங்களையும், பாண்டிய நெடுங்காப்பியம் உருவாகிய கதையினையும் அதில் கிடைத்த அனுபவங்களையும் சுவையான செய்திகளையும் பகிர்ந்துகொண்டார்


அமைப்பாளர்கள் சார்பில் தனது கருத்துக்களை கிருபானந்தன் அளித்தார்


பங்கேற்ற சரித்திர ஆர்வத்தினை பிரதிபலித்த   பார்வையாளர்களின் கேள்விகளும்,  ஸ்ரீஜா அவர்களின் களப்பணி அனுபவம் பின்னணியில்  மறுமொழியும் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக விளங்கியது





.சுபா சுரேஷ் நன்றி நவில ஒரு இனிய நிகழ்வு நிறைவுபெற்றது








.

குவிகம் இலக்கிய வாசலின் எட்டாவது நிகழ்வு - அறிவிப்பு


குவிகம் இலக்கிய வாசலின் எட்டாவது நிகழ்வு 
 

"பாண்டிய நெடுங்காப்பியம்" - வரலாற்றுப் பின்னணி

 

 பகிர்ந்துகொள்பவர்

நாவலாசிரியை ஸ்ரீஜா வெங்கடேஷ்
(ஒரு சரித்திர நாவல் உருவாகியதின் களப்பணி அனுபவங்களும் சுவையான செய்திகளும்)

இம்மாதம் கவிதை வாசிப்பவர் :-    சாந்தி அவர்கள்
இம்மாதம் சிறுகதை வாசிப்பவர் :-    கீதா அவர்கள்
 

நாள்:  21 நவம்பர்  2015 
சனிக்கிழமை ,
மாலை - 6.30 மணி  

இடம்: பனுவல் புத்தக நிலையம்,
             
எண். 112, திருவள்ளுவர் சாலை
             திருவான்மியூர் சென்னை  600041  

(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம்
மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

Wednesday 28 October 2015

ஏழாம் நிகழ்வின் அறிவிப்பு





குவிகம் இலக்கிய வாசல் தனது வலைப்பூவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறது



குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு   

"அசோகமித்திரன் படைப்புகள்"


     உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா

    இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்
    இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கரன் 

    நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை        மாலை     6.30 மணி  
  
  இடம்: பனுவல் புத்தக நிலையம்எண். 112திருவள்ளுவர் சாலை

                     திருவான்மியூர் சென்னை  600041
   
(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

 இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும்  பகிர்ந்து 
 கொள்ள அழைக்கிறோம்

இலக்கிய வாசலின் ஏழாவது நிகழ்வு - ஒரு பதிவு





குவிகம் இலக்கிய வாசலின் ஏழாவது நிகழ்வாக "அசோகமித்திரன் - படைப்புகள்" அக்டோபர் 24 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம் அரங்கில் நடைபெற்றது



திரு கிருபானந்தன் அவர்கள் எல்லோரையும் வரவேற்றார்
நிகழ்ச்சியின் முதலில் திருமதி சுபா சுரேஷ் கவிதை வாசித்தளித்தார். அதன் ஒலி வடிவம் :-



இம்மாத சிறுகதையை அளித்தவர் Dr. J பாஸ்கரன் அவர்கள் அதன் ஒளி வடிவம்.


இந்நிகழ்வின் சிறப்பு உரையை திரு சாருநிவேதிதா அவர்கள்  வழங்கினார். 
அதன் ஒளி வடிவம் (நன்றி ஸ்ருதிடிவி)



அசோகமித்திரன் படைப்புகளில் தங்கள் அனுபவத்தை பகிந்து கொண்டவர்கள் 
திரு அம்ஷன்குமார்,



 Dr. J  பாஸ்கர்



 கிருபானந்தன்





நன்றியுரைக்குப் பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது



Thursday 15 October 2015

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு


குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு   

"அசோகமித்திரன் படைப்புகள்"


     உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா

    இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்
    இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கரன் 

    நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை        மாலை     6.30 மணி  
  
  இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை
                     திருவான்மியூர் சென்னை  600041
   
(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

 இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும்  பகிர்ந்து 
 கொள்ள அழைக்கிறோம்

Saturday 26 September 2015

அறிவிப்பு :- ஆறாவது நிகழ்வு





   குவிகம் இலக்கியவாசலின் ஆறாம் நிகழ்வு  


கலந்துரையாடல் 

தலைப்பு        "திரைப்படப் பாடல்களில் கவிநயம்" 
நாள்                19-09-2015 சனிக்கிழமை  @ 6.00 PM
இடம்               JG கண்ணப்பன் வாசுகி அரங்கம்
                          எண்: 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
                          (ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்
                          சென்னை 600004

இம்மாதம் முதல் ஒரு சிறுகதையும், சில கவிதைகளும் படைப்பாளர்கள் வாசித்து அளிப்பார்கள்

இம்மாதச் சிறுகதை      :-  திரு          கோ. சரவணன்
இம்மாதக் கவிதைகள் :-   திருமதி   கிருஷாங்கினி

நீங்கள் ரசித்த கவிநயம் மிக்க திரைப்படப் பாடல்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்
 

அனைவரும் வருக.

 குவிகம் இலக்கிய வாசல்  





சென்ற மாத நிகழ்ச்சி "கவியரங்கம் - முகத்தை மறைக்குதோ முகநூல்" பார்க்க                                                                         :- இங்கே சொடுக்குக    

குவிகம் மின்னிதழ் படிக்க    : http://kuvikam.tumblr.com/


முந்தைய பதிவுகளும் அறிவிப்புகளும்

பதிவுகள்

Wednesday 26 August 2015

அறிவிப்பு - ஐந்தாம் நிகழ்வு கவியரங்கம்

               
இலக்கிய அன்பர்களுக்காக நடத்தப்படும் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகள்



குவிகம் இலக்கியவாசலின் ஐந்தாம் நிகழ்வு
கவியரங்கம் 
தலைப்பு :"முகத்தை மறைக்குதோ முகநூல்?" 

முன்னிலை: கவிப்பேரொளி நீரை அத்திப்பூ

நாள்:- 22-08-2015 சனிக்கிழமை  @ 6.00 PM
இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்
             எண்: 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
             (ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்), சென்னை 600004

உங்கள் கவிதையை ( நான்கு  நிமிடங்களுக்கு மிகாமல்)   வாசிக்க பதிவு செய்யவும் -
மின்னஞ்சல்  ilakkiyavaasal@gmail.com அல்லது அலைபேசி 9791069435

அனைவரும் வருக.
குவிகம் இலக்கிய வாசல்

Tuesday 25 August 2015

கவியரங்கம் - முகத்தை மறைக்குதோ முகநூல்

குவிகம் இலக்கிய வாசலின் ஐந்தாம் நிகழ்வாக கவிப்பேரொளி திரு. நீரை அத்திப்பூ அவர்களின் முன்னிலையில் 22.08.2015 சனிக்கிழமை மாலை டாக்டர் JG கண்ணப்பன் வாசுகி அரங்கத்தில் நடைபெற்றது



தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு தரும. ராஜேந்திரன் வரவேற்றார், முன்னிலை வகிக்கும் கவிப்பேரொளி திரு நீரை அத்திப்பூ அவர்களின் அறிமுகக் குறிப்பையும் வாசித்தார்.  

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து உரையாற்றிய திரு அத்திப்பூ  அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்

   

தொடர்ந்து கவிதை வாசித்தவர்கள் (ஒலிவடிவத்துடன்)

திருமதி தயாநி  தாயுமானவன்


கவிஞர் ஆரா 

திருமதி சுபா சுரேஷ்


திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன்
(திரு சுந்தரராஜன் அவர்களின் கவிதை)


திரு கு மா பா திருநாவுக்கரசு 
(குரல் திரு கிருபானந்தன்) 

திரு மயிலை வண்ணதாசன்


திரு கிருபானந்தன் 
திரு தரும. ராஜேந்திரன்

திரு நீரை அத்திப்பூ அவர்களின் நிறையுரையின் ஒலிவடிவம்

திரு கிருபானந்தன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது

Sunday 2 August 2015

நான்காவது நிகழ்வின் அறிவிப்பு

குவிகம் இலக்கிய வாசலின் நான்காவது நிகழ்வு 

                  "சிறுகதைச்  சிறுவிழா"


இடம்:  ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை,
                  ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
நாள்:   18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00

கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.

பரிசுகளும் உண்டு.

நேரம் கருதி சிறுகதைகளை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.

பின்னால் நடத்தத்  திட்டமிட்டுவரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.

கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது  9791069435 (கிருபானந்தன்) என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.


குவிகம் மாத இதழ் படிக்க              http://kuvikam.tumblr.com/


பின்குறிப்பு :- கடந்த நிகழ்வு குறித்த பதிவு நிகழ்ச்சியின் ஒலிவடிவத்துடன் பார்க்க: >>      http://ilakkiyavaasal.blogspot.in/2015/07/blog-post.html

Monday 20 July 2015

நிகழ்வு 4 "சிறுகதைச் சிறுவிழா"


குவிகம் இலக்கியவாசல் நான்காம் நிகழ்வு "சிறுகதை சிறுவிழா"'
சென்னை -ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில்
18.07.2015 அன்று மாலை நடந்தது .தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாலை 6.15 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது .அனைவரையும் வரவேற்ற






திரு.கிருபானந்தன்  நடுவர்களை மேடைக்கு அழைத்தார்
.



நவீன விருட்சம் என்னும் காலண்டு இதழை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மிகுந்த முனைப்புடன்  வெளியிட்டு வருபவரும், கணையாழி குறுநாவல் போட்டிகளில் பரிசுகளும் பாராட்டுகளும்  பெற்றவரும், விருட்சம் இலக்கிய சந்திப்பு என்னும் நிகழ்ச்சியின் அமைப்பளர்களில் ஒருவரும், பல முன்னணி எழுத்தாளர்களின் இனிய நண்பருமான  -  திரு அழகிய சிங்கர் அவர்கள்,

புகைப்படக் கலைஞரும், சிறுகதை, கவிதை தொகுப்புகள், வானொலி நிகழ்ச்சிகள் தவிர இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளை பேட்டிகள் கண்டு புகைப்படங்களுடன் அளித்தவரும், ஓவியர் கோபுலு, ஓவியர் நடனம் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவருமான – திரு, கிளிக் ரவி அவர்கள்,

பத்து சிறுகதை கவிதை தொகுப்புகள் தவிர அரசியல்,  அறிவியல், சுய முன்னேற்றம், ஆன்மிகம், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், சினிமா, நகைச்சுவை என பலதரப்பட்ட பதிவுகளை வலைப்பூவிலும் சுமார் நான்காயிரம் நண்பர்கள் கொண்ட  முகநூலிலும் எழுதிவருபவரும்  தினமலர் வாரமலர் பகுதியில்  தொடர்ந்து  எழுதிவருபவருமான    திரு KG ஜவர்லால் அவர்கள்.


வருகை தந்து சிறப்பித்த அன்பர்கள்

பதிவு செய்திருந்த 13 எழுத்தாளர்கள் வாசித்த ==>>   கதைச் சுருக்கங்கள் இங்கே

          ஒலி வடிவில் கேட்க  


சுபா சுரேஷ் -  "அனுபவம்" 


திரு. மலைச்சாமி   "ஊமைக்கொலுசுகள்"


கவிஞர் ஆரா  "எதிர்பாராதது"


திரு. குமரி அமுதன் "எழுந்து நில்"


திரு. ஸ்ரீதரன்  "கண்ணாடிக்கதவுக்கு அப்பால்"


திரு. கொற்றவன்  "வீரன் தந்த பரிசு"



திரு ராஜகோபாலன்  "பிரேதத்துடன் ஒரு பயணம்"




திரு. சேது கோபிநாத்  "தவிப்பு"



திரு.  G B சதுர்புஜன்    "நடிகன்"




திரு. சரவணன்   "நிலாவின் பொம்மை" 


திருமதி  R வத்சலா    "மூலை"




திரு. தொல்காப்பியன்    "மேகதூதம்"



திரு J ரகுநாதன் "லாரா"



பரிசு பெற்றோர்







முதல் பரிசு பெறுபவர் திரு J ரகுநாதன்









இரண்டாம் பரிசு பெறுபவர் திரு கொற்றவன்

















மூன்றாம் பரிசு பெற்றவர்கள் திரு
சரவணன் - திரு GB சதுர்புஜன்





மற்ற கதைகள்

முன்னமே பதிவு செய்ய இயலாவிட்டாலும் முனைவர் மாணிக்கம் பிச்சை அவர்களும் தனது கதையினை வாசித்தார்
அமைப்பாளர்கள் ஒருவரான  திரு தர்ம.ராஜேந்திரன் தனது "1974" என்னும் கதையினை வாசித்தளித்தார்



அமைப்பாளர் திரு.சுந்தரராஜன்  அவர்களின் "ஒரு தவறு செய்தால்.." என்னும்  கதையினை  அவரது துணைவியார் திருமதி விஜயலட்சுமி வாசித்தார்.






நடுவர்கள் உரை

நடுவர் ஜவர்லால் பேசுகையில் எல்லோரும் ஈடுபாட்டுடனும்
உற்சாகத்துடனும் பங்குபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். இம்மாதிரியான முயற்சிகளில் பரிசு என்பது ஒரு பொருட்டல்ல என்றார். வேறுபட்ட நிலைகலன் கொண்ட சில கதைகளையும் குறிப்பிட்டு நிகழ்ச்சி நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.


நடுவர் கிளிக் ரவி தனது எழுத்து அனுபவங்களைக் குறிப்பிட்டுவிட்டு, சரித்திரக்கதை, கிராமக்கதை, வெளிநாட்டுக்கதை என பலகதைகள்
வந்துள்ளதைக் குறிப்பிட்டார். சில கதைகளையும் குறிப்பிட்டார். மேலும் இளைஞர்கள் இலக்கிய ஆர்வம் கொள்ள ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


நடுவர் அழகியசிங்கர் தமது உரையில் கதைகளில் கருப்பொருளும் தளமும் (அவர் உபயோகித்த சொல் IDEAS) பல தளங்களில் ஆச்சரியமாக இருந்தன என்றார். உதாரணத்திற்காக சில கதைகளையும் குறிப்பட்டார்.ஆனால், நல்ல தளத்திலிருந்த கதைகள் சில சரியாகச் சொல்லப்படவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

 பத்திரிகைகளுக்கு  கதைகள் வருவதில்லை எனவும்  இந்நிகழ்ச்சியில்   இந்த எண்ணிக்கையில் கதைகள் படிக்கப்படும் என்று தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனை சாதித்த அமைப்பாளர்களை வாழ்த்தி நன்றி கூறினார்.

நிறைவு 


திரு தரும. ராஜேந்திரன்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
 நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஒரு பின் குறிப்பு :

நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு. பிரபஞ்சன் அவர்கள்  . படிக்கப்பட்ட இந்தக் கதைகளைக்  கொண்டு ஒரு  சிறுகதைப் பட்டறை முயற்சி   செய்யலாம்.என்று ஒரு  யோசனை தெரிவித்தார். இது பற்றிய தங்கள் கருத்தை கதை படித்த அன்பர்களும் மற்றவர்களும்   தெரிவிக்கக் கோருகிறோம்.



Thursday 2 July 2015

நான்காவது நிகழ்வு - சிறுகதைச் சிறுவிழா

குவிகம் இலக்கிய வாசல் நான்காவது நிகழ்வு



"சிறுகதைச்  சிறுவிழா"


இடம்:  ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை,
                  ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
நாள்:   18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00

கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.

பரிசுகளும் உண்டு.

நேரம் கருதி சிறுகதைகளை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.

பின்னால் நடத்தத்  திட்டமிட்டுவரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.

கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது  9791069435 என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.

குவிகம் இலக்கியவாசல்    
குவிகம் மாத இதழ் படிக்க         ---             http://kuvikam.tumblr.com/

குவிகம் இலக்கிய வாசல்  பார்க்க ---     http://ilakkiyavaasal.blogspot.in

பின் குறிப்பு:-
அனைவருக்கும் வாய்பளிக்கும் நோக்கத்துடன்   நேரம் மட்டுமே நிபந்தனை. எனினும் குவிகம் மின்னிதழில்  பிரசுரமாவதற்கும், இக்காரணம் கொண்டேனும்     ஒரு நல்ல கதையை அனபர்களுக்கு அளிக்கும் வாய்ப்பையும் கருதி இதுவரை பிரசுரிக்கப்படாத கதை அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்