தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய
இலக்கியவாசல் சுந்தரராசன், வந்திருந்த சான்றோர் பெருமக்களை அன்புடன் வரவேற்று தி.ஜா.வின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லி அவர் படைப்புகளின் சிறப்புகளை
எடுத்துரைத்து, பார்வையாளர்களைப் பேச அழைத்தார்!
உழைக்காமலே குத்தகை வருமானத்தில் வாழ்க்கை நடத்தி ஏழ்மையில்


ஒரு
நாவல் எப்படி உருவானது என்று தி.ஜா.தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளதை
எடுத்துரைத்தார்! எதிர் வீட்டு கிழவரின் இளம்பெண் கல்யாணமும், தனது மகன் குடும்பத்தையே வீட்டைவிட்டு
வெளியேற்றிவிட்டு, இளம் மனைவியுடன கிழவர் தனிக்குடித்தனம் ஒருவருடம் நடத்திவிட்டு மரணம் அடைந்த நிகழ்வையும் குறிப்பிட்டார். தன்னை விட எட்டுவயது அதிகமான அழகும், அமைதியும், புத்திகூர்மையும் உள்ள பெண் மீது தான்
கொண்ட ஒரு தலை மோகம் தான்
மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது! “இந்த ஞாபகங்கள் ,என் ஆசைகள் ,நப்பாசைகள் ,நான்
எப்படி இருந்திருக்க வேண்டுமென்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள், பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று
விரும்பினேனோ, எல்லாமாக சேர்ந்து நாவலாக உருவாயின “ என்று
ஜானகிரமனே குறிப்பிட்டுள்ளார் என்பதைப்
பகிர்ந்துகொண்டார்!


இரு
முரண்பட்ட தலைப்புகளிள் எழுதப்பட்ட சிறுகதைகள் இரண்டையும் ஒப்பிட்டு
அழகாகப் பேசினார்.
."குளிரில் "- 80 வயது கிழவி கதவைத் தட்டினால் அவள்
வீட்டில் திறக்க மாட்டார்கள் .அவ்வப்போது அடியும் வாங்கும் பாட்டிக்கு வக்காலத்து வாங்கிய
பக்கத்து வீட்டுக்காரர் உபசரித்து
தங்கள் வீட்டில் தூங்க வைத்தால், கிழவி தனது வீட்டுப்
பெருமை பேசுகிறதாம்!
"வெய்யிலில்"
- செல்ல மகள் வெய்யில் நேரத்தில் அவசரமாக ஊருக்கு கிளம்பி இரயிலடி செல்ல ,அவள் மறந்து விட்டுப்போன துணியை எடுத்துக்கொண்டு வெய்யிலில் ஓடும் மனிதரைப்
பார்த்து டீக் கடைக்காரர் , ‘இந்தத் துணியாவது உன்னிடம் இருந்து அவள் பிரிவை
எளிதாக்கட்டுமே’ என்பது சிறப்பு!


அவன்
அப்பா தண்டபாணி தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவன் அம்மா அலங்காரம் உண்மையிலேயே அழகானவள் .ஆனால் அவங்க
வீட்டுக்கு வரும் பணக்காரர் சிவசுவிடம் அவளுக்கு கூடாநட்பு ஏற்பட்டு விடுகிறது .
இதை அவள் கணவன் உள்பட யாருமே கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள்.
அப்புவிடம்
பாவமன்னிப்பு கேட்கும் அம்மா அலங்காரம் :உன் வேதத்தாலும் என் பாவத்தை போக்க இயலாது
.என்னைப் போன்றவா எல்லாம் காசியிலே போய் மூலையிலே முக்காடு போட்டு உக்காந்து
சாகவேண்டும் என்கிறாள் .. இந்த
நாவல் தி.ஜா.வை ஜாதிப் பிரஷ்டம் செய்யும்
அளவுக்குப் பேசப்பட்டதும் உண்மை

ஒரு சாமியாரின் அருளை வேண்டி அவருக்கு பிடி கருணை அளிக்க தில்லுமுல்லு செய்யும் ஒரு சிறு வியாபாரி (பிடிகருணை), வறுமையின் இயலாமையால் கல்கத்தாவில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குப் போகும் ஒரு சிறுமிக்கு தன்னால் இயன்ற அன்பைக்கட்டும் வகையில் ஒரு ஆரஞ்சு அளிக்கும் பாலகன் (சிலிர்ப்பு).
தனது தாத்தா மகாநாமரை பழிவாங்க அவரைப் போரில் வெல்லும் அரசன் விடூடபன் (தாத்தாவும் பேரனும்) ஆகிய கதைகளைக் குறிப்பிட்டார்.
தான் கண்ட மனிதர்களையும் நிகழ்வுகளையும் சிறு சிறு உரையாடல்கள் மூலமும் எளிய வருணனைகள் மூலமும் மிக எளிதாகச் சொல்லி விடுவது தி. ஜா வின் சிறப்பு என்று குறிப்பிட்டார்.
அவர் கதைகளீல் வரும் கூடா நட்பைப் பற்றியும் குறிப்பிட்டார். அதனால் அந்தக் காலத்தில் சில இல்லங்களில் ஆனந்தவிகடன் வாங்கிவந்தவுடன் தி.ஜானகிராமன் , ஜெயகாந்தன் கதை உள்ள பக்கங்களையும் பிய்த்து விட்டுத்தான் தங்கள் குழந்தைகளுக்குப் படிக்க கொடுப்பார்களாம்!.
வந்திருந்து தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் ஏனைய பார்வையாளர்களுக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கிருபானந்தன்.
.