Sunday 19 April 2015

இனிதே திறந்தது இலக்கிய வாசல்





18.04.2015 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் இலக்கிய சிந்தனையாளர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில்  குவிகம் இலக்கியவாசல் தொடக்கவிழா இனிதே நடைபெற்றது !

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது !

குவிகம் இலக்கிய வாசலை முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்
திறந்துவைத்தார் !


இலக்கிய ஆர்வலர்களால் அரங்கம் 
நிறைந்து காணப்பட்டது 


திரு சுந்தரராசன் அனைவரையும் வரவேற்றார் !













'இலக்கியமும் நகைச்சுவையும்'  என்ற தனது முதல் நிகழ்ச்சியை "குவிகம் இலக்கிய வாசல்" முனைவர்  திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சீரிய தலைமையின்கீழ் அரங்கேற்றியது !


தனிநபர் புகழ்ச்சியை புறந்தள்ளி தமிழ்இலக்கிய நிகழ்ச்சியை மட்டுமே  முன்னிறுத்தி  குவிகம் இலக்கியவாசல் செயல்படும் என நம்பிக்கைத் தெரிவித்தும் அமைப்பாளர்கள் .சுந்தரராசன், கிருபானந்தன் அவர்களின் முயற்சியை ஊக்குவித்தும்  பேசிய திருப்பூர் கிருஷ்ணன் தமிழ் இலக்கியங்களிலே புதைந்துகிடக்கும் நகைச்சுவை நயங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் !

அடுத்து பேசிய முனைவர்  வ வே சு அவர்கள் இலக்கியமும் நகைச்சுவையும் என்ற தலைப்பிலே தான் இயற்றிய கவிதைகளை மன்றத்தில் படித்து அனைவரையும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினார் !

தனது பள்ளிப்பருவத்திலே நடந்த மறக்கவொன்னா நகைச்சுவை நினைவுகளை அவர் கவிதையில் வடித்து படித்தது அரங்கத்தினரின் கரவொலியை பெற்றது !

மூன்றாவதாய் பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் தனது கவிதைப் படைப்புகளில் இடம்பெற்ற நகைச்சுவை கவிதைகளை அரங்கத்தார் ரசிக்கும் வண்ணம் பகிர்ந்துகொண்டார் !

வாழ்வியலை ஒட்டிய அவரது கவிதைகள் அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.

நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கவிதைகள் படிக்கப்பெற்றுப்
பாராட்டைப்  பெற்றன !





திரு கிருபானந்தன் நன்றி நவில தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது !



--- சிறப்பு செய்தியாளர்  தரும .இராசேந்திரன் , பாபநாசம் 

தங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்