Thursday 26 January 2017

"நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்" - ஒரு பதிவு



குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016  நிகழ்வு இலக்கிய சிந்தனையின் 561 வது மாதாந்திரக் கூட்டத்துடன் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் 17-12-2016 அன்று நிகழ்வுற்றது. 


இலக்கியசிந்தனையின் சார்பில் திரு லக்ஷ்மணனின்  உரையுடன் தொடங்கி திரு தேவக்கோட்டை வ. மூர்த்தி அவர்கள்  "உயிர்த்தேனும் மரப்பசுவும்" என்ற தலைப்பில் தி ஜ வின்     இரு நாவல்களைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்.


தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016 நிகழ்வாக இலக்கிய வாசல் சுந்தரராஜனின் அறிமுக உரையைத் தொடர்ந்து "நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்"  என்னும் தலைப்பில் கவிஞரும், ஓவியரும், விமர்சகரும் ஆன திரு இந்திரன் சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் 

ஒரே நிகழ்வில் இரு மனம்கவர் உரைகளுடன் கூடிய நிகழ்ச்சி    கிருபாநந்தனின் நன்றியுரையுடன்  நிறைவுற்றது.