Tuesday 26 January 2016

"புத்தக உலகம்" - ஜனவரி 23 அன்று நடைபெற்ற நிகழ்வின் பதிவு





குவிகம் இலக்கிய வாசலின் பத்தாவது நிகழ்வான "புத்தக உலகம்" திரு  ரவி தமிழ்வாணனின் சிறப்புரையுடன் ஜனவரி இருபத்து மூன்றாம் நாள் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலைய அரங்கில் நடைபெற்றது.



சுந்தரராஜன் வந்திருந்தவர்களை வரவேற்று , குவிகம் இலக்கியவாசலில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.முக்கிய  விருந்தினரான திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் வெற்றிப்பாதைகளையும் சுட்டிக் காட்டினார்.   
 


திருமதி பத்மஜா ஸ்ரீராம் அவர்கள் கவிதை வாசித்தார். 
திருமணம் ஆன பெண் புகுந்த வீடு சென்ற பிறகு வார விடுமுறையில் தன் அன்னையையும், பாட்டியையும் பிறந்த வீட்டில் பார்க்கும் போது   அவள் மனதில் ஏற்படும் பாசப் பிணைப்பைக்  கவிதையாய் - உணர்வுகளாய் நம்முடன் பகிர்ந்து கொண்டார். 
திரு அழகியசிங்கர், ஒரு பெண் தன்னைக் காதலிக்கும் இரண்டு பேர்களில் யாரைத் திருமணம் செய்து கொள்ளுவது என்ற தவிப்பை விறுவிறுப்பான கதை மூலம் நமக்கு வழங்கினார்.

திரு ரவி தமிழ் வாணன் " புத்தக உலகம்" என்ற தலைப்பில் தமிழ்ப் புத்தகங்கள்  வாசிக்கும் களத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து விளக்கினார். எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிறைந்த முதல் காலம். புத்தகங்கள் படிப்பதையே தவிர்க்கும் இன்றைய காலம்.இணைய தளங்கள் ஆதிக்கத்தில் வரும் எதிர்காலம்.. 


அவரது சிறு உரையைத் தொடர்ந்து வாசகர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் இலக்கியம், இளம் பிராயத்தினருக்குத் தேவையான புத்தகங்கள், தமிழ்க் கல்வி கட்டாயமாக்க வேண்டியதின் அவசியம், நடமாடும் புத்தகாலயம் அமைப்பது  போன்ற பல புத்தகம் சம்பந்தப்பட்டக் கேள்விகளை சரமாரியாக எழுப்பினர் .

 ரவி தமிழ்வாணன் அவர்களும் மற்றையோரும் அதற்கான விடைகளைப் பகிர்ந்து கொண்டனர். மணிமேகலை பிரசுரம் நடத்தும் எழுத்தாளர் - பதிப்பாளர் முதலீட்டு செய்யும் முயற்சியையும் திரு ரவி விளக்கினார். 

சுந்தரராஜன் அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிது முடிந்தது. 

கலந்துரையாடல் என்பதற்கு இந்தக் கூட்டம்  ஓர்  அருமையான உதாரணமாக இருந்தது. 


No comments:

Post a Comment