Tuesday 2 June 2015

திரு பிரபஞ்சன் அவர்களின் நேர்காணல்


நமது குவிகம்  இலக்கிய வாசல் நடத்தும் 
                 மூன்றாவது நிகழ்வு

 நிகழ்ச்சி : "நேர்காணல் -    எழுத்தாளர்  
                      திரு. பிரபஞ்சன் அவர்கள்"

இடம் : ஸ்ரீநிவாச காந்தி நிலையம்,
              அம்புஜம்மாள் சாலை,
              ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018
நேரம்:  மாலை 6.30 மணி

நாள்: 20.06.2015 ( சனிக்கிழமை)

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கக் கோருகிறோம்.

அன்புடன்

குவிகம் இலக்கிய வாசல்

திரு பிரபஞ்சன் அவர்கள் குறித்து:
பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை  "என்ன உலகமடா"   பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் "வானம் வசப்படும்"  தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது நாடகமான "முட்டை" டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான "நேற்று மனிதர்கள்" பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வருகிறார்.

விருதுகள்:

·         சாகித்திய அகாதமி விருது                                 வானம் வசப்படும் (1995)
·         பாரதிய பாஷா பரிஷத் விருது
·         கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள்              மகாநதி
·         விருது
      இலக்கியச் சிந்தனை விருது                              மானுடம் வெல்லும்
·         சி. பா. ஆதித்தனார் விருது                                  சந்தியா
·         தமிழக அரசின் பரிசு                                              நேற்று மனிதர்கள் 
·         தமிழக சிறந்த சிறுகதைத்              ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
      தொகுப்பிற்கான பரிசு


இவரது படைப்புகளில் சில
புதினங்கள்

  • ·         வானம் வசப்படும்
  • ·         மகாநதி
  • ·         மானுடம் வெல்லும்
  • ·         சந்தியா
  • ·         காகித மனிதர்கள்
  • ·         கண்ணீரால் காப்போம்
  • ·         பெண்மை வெல்க
  • ·         பதவி
  • ·         ஏரோடு தமிழர் உயிரோடு
குறு நாவல்கள் தொகுப்பு]
·         ஆண்களும் பெண்களும்
சிறுகதைத் தொகுப்புகள்

  • ·         நேற்று மனிதர்கள்
  • ·         விட்டு விடுதலையாகி
  • ·         இருட்டு வாசல்
  • ·         ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
  • ·         பூக்களை மிதிப்பவர்கள்
  • ·         பொன்முடிப்பு
  • ·         வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்
நாடகங்கள்

  • ·         முட்டை
  • ·         அகல்யா
கட்டுரைகள்

  • · மயிலிறகு குட்டி போட்டது
  • ·  மகாபாரத மாந்தர்கள்                                              (நன்றி தமிழ் விக்கிபீடியா)

No comments:

Post a Comment