Monday 23 May 2016

முதலாம் ஆண்டு விழா


குவிகம் இலக்கியவாசலின் ஆண்டு விழா, ஏப்ரல் 23ம் தேதி அன்று சென்னை  தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் "இயல் இசை நாடகம்" என்ற தலைப்பில் அரங்கம் நிறைந்த
  திருவிழாவாகச்  சிறப்பாகக்  கொண்டாடப் பட்டது.
பள்ளிச் சிறுவர்களின் வில்லிப்பாட்டு என்னும் இசைத் தமிழுடன் நிகழ்ச்சி தொடங்கியது.



எழுத்துலக சிகரங்கள் திரு அசோகமித்திரன் மற்றும் திரு இந்திரா பார்த்தசாரதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது விழாவிற்கு மேலும் சிறப்பைக் கூட்டியது
திரு சுந்தரராஜன் தனது வரவேற்புரையில் கடந்த பன்னிரண்டு மாதங்களில் குவிகம் இலக்கியவாசல்  நிகழ்த்திய  பன்னிரண்டு  சுவையான நிகழ்ச்சிகளைப்   பற்றி விவரமாக எடுத்துரைத்தார். இலக்கியத்தில் நகைச்சுவை என்ற முதல் நிகழ்ச்சியிலிருந்து நேர்காணல், கலந்துரையாடல், புத்தக அறிமுகம், சரித்திர நாவல் படைத்த அனுபவங்கள், கவியரங்கம், புத்தக உலகம், சிறுகதை சிறுவிழா என்று இதுவரை நடந்துள்ள விவரங்களைத் தெரிவித்தார். 

திரு அழகியசிங்கர்,  திரு  மியூசிக் கண்ணன் மற்றும் திருமதி  லதா ரகுநாதன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களைப் பற்றி பேசினார்கள்.








திரு அசோகமித்திரன், திரு இந்திரா பார்த்தசாரதி இருவரும் குவிகம் இலக்கியவாசலைப் பாராட்டியதுடன்  இன்றைய இலக்கியத்தைப் பற்றித் தங்கள் கருத்துரைகளையும் எடுத்துரைத்தனர். நாடகத்தை இறுதி வரையிலும் கண்டுகளித்து தங்களுடைய பாராட்டுக்களைத்  தெரிவித்தார்கள்.

திருமதி தாரிணி கணேஷ்  நாடகமாக்கி இயக்கிய  திரு கோமல் சுவாமிநாதனின் சிறுகதையின்    "மனித உறவுகள் " பாரா ட்டுகள் பெற்றது.

 திரு கோமல் சுவாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி விஜயலக்ஷ்மி மற்றும் அவரது புதல்வன் திரு ரவியும் விழாவில் கலந்து கொண்டது மேலும் சிறப்பு. முந்திய நிகழ்வுகளை சிறப்புற நடத்திதந்த திரு பாம்பே கண்ணன், திரு ரவி தமிழ்வாணன், திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் ஆகியோரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

சிறப்புரைகள், வில்லுப்பாட்டு மற்றும் நாடகத்தின் ஒளிவடிவங்களை  இப்பதிவின் இறுதியில் காணலாம். .

இந்நிகழ்வு பற்றிய  டாக்டர். பாஸ்கரன் அவர்களின்  முகநூல் பதிவை அவரது அனுமதியுடன் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று உலகப் புத்தக நாள் ! ஷேக்ஸ்பியர் பிறந்த நாள்! குவிகம் இலக்கியவாசல் தனது முதலாண்டு நிறைவு விழாவை இயல்இசைநாடகம் கொண்ட முத்தமிழ் விழாவாகக் கொண்டாடியது. தமிழ் இணைய கல்விக் கழக அரங்கில்மூத்த எழுத்தாளர்கள்திரு இந்திரா பார்த்தசாரதியும்திரு அசோகமித்திரனும் கலந்துகொண்டு பேசினார்கள் !

பள்ளிக் குழந்தைகள்பாரதியின் கண்ணன் கவிதைகளைவில்லுப்பாட்டாகப் பாடினார்கள்! கண்ணனைக் குருவாகசேவகனாகவிளையாட்டுப் பிள்ளையாககுழந்தையாக பாவித்து பாரதியார் பாடிய கவிதைகளை அழகாகப் பாடினார்கள் - வித்தியாசமாக இருந்தது. தமிழின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது !

திரு அழகியசிங்கர்அசோகமித்திரன்அவரது கதைகள் பற்றியும் தினமும் அவரது புத்தகங்களில் ஏதாவது ஒன்றைப் படிப்பதாகவும் கூறினார். ஆரம்பகாலம் முதல் இன்றுவரைஅசோகமித்திரன் எழுத்துக்களின் அழகும்ஆழமும் மாறவே இல்லை என்றார். புத்தக தினத்தை ஒட்டிகவிதை ஒன்றையும் வாசித்தார். அசோகமித்திரன் அவர்கள் தனக்கு 85 வயது என்றும்இனி எதிர்பார்ப்புகள் ஒன்றும் இல்லை எனவும் குறிப்பிட்டார். அனைத்துப் புத்தகங்களையும் வாசிப்பது இயலாது - ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே முடியலாம் என்றார்! எந்தக் கட்டுபாடுகளுமின்றிசுதந்திரமாக நினைத்தபோது பிடித்தவற்றை வாசிப்பது நல்லது என்றார். இன்றும் எழுதிவரும் இவரது எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை!

திரு (மியுசிக்) கண்ணன்இந்திராபார்த்தசாரதி அவர்களைப் பற்றி குறிப்பிடும்போதுஅவரது நாடகங்கள் - அவுரங்கசீப்ராமானுஜர் போன்றவை - பல மேடைகளில் பிரசித்தம் என்றார். சிறுகதைநாவல்களில் வரும் பாத்திரங்கள் அறிவுஜீவிகளாகதவறுகளும் செய்பவர்களாக இயல்பாக சித்தரிக்கப் பட்டிருக்கும் என்றார்.

இந்திரா பார்த்தசாரதி   பேசும்போதுபுத்தக தினம்ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் பற்றியும் குறிப்பிட்டார். முத்தமிழ் விழாஇயல்இசை,நாடகம் என்பது பிற்கால வழக்கு - சிலப்பதிகாரத்தில்சேர, சோழ, பாண்டிய காலத்தில் நடந்த விழாவைக் குறிப்பதாகக் கூறினார்! முதலில் கதை எழுதியபோதுஅவரது பேராசிரியர்தமிழாசிரியர் இப்படிக் கதைகள் எழுதலாமா எனக்கேட்டாராம் ! நாடகங்கள் எழுதுபவர்கள்அந்தக் காலத்தில் குறைத்துப் பார்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்!

இரு பெரும் எழுத்தாளுமைகள்தன் வயதையும் பொருட்படுத்தாமல்மேடையேறி தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது இதமாயிருந்தது.

ஏதோ தவிர்க்கமுடியாத காரணங்களினால் திரு பிரபஞ்சன் வரவில்லை. ஆனாலும் அவரை அறிமுகப் படுத்தும் விதமாக திருமதி லதா ரகுஅவரது எழுத்துக்கள்விருதுகள் பற்றிய விபரங்களை அழகாககோர்வையாக எடுத்துரைத்தார்கள் !

கோமல் சுவாமிநாதன் அவர்களின் சிறுகதை - மனித உறவுகள் - நாடகமாக்கப் பட்டுஅவரது புதல்வி திருமதி தாரிணி கணேஷ் அவர்கள் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டது! நான்கைந்து காட்சிகளில்அளவான வசனங்களுடன்மிகையில்லா நடிப்புடன் நாடகத்துடன் பார்வையாளர்களை ஒன்றிடச் செய்தது பாராட்டுக்குரியது! கிருபானந்தன்,தாரிணி மற்றும் பங்கு பெற்ற அனைவருமே சிறப்பாக நடித்தார்கள்! பணம்பதவிஅயல்நாட்டு மோகம் இவைகளுக்கு முன் உறவுகள் மறுக்கப் படுவதை கோமல் எழுதியதைஅதே உணர்வுடன் நடித்தார்கள் - தாரிணி மேலும் மேலும் நாடகங்களில் உயர்வார் - வாழ்த்துக்கள் !

இயல்இசை, நாடகம் என குவிகம் இலக்கியவாசல் நடத்திய ஆண்டுவிழா சிறப்பாகவும்வித்தியாசமாகவும் இருந்தது. உலகப் புத்தக நாள் மாலை இலக்கிய வாசத்துடன் இனிமையாகக் கழிந்தது!

குவிகம் இலக்கியவாசல்பாராட்டுக்குரியது!!
-    டாக்டர் பாஸ்கரன்


தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் அலுவலர்களின் ஆர்வம்மிக்க ஒத்துழைப்பு மிகுந்த மன நிறைவை அளித்தது.
குவிகம் இலக்கிய வாசல் பெருமிதம் கலந்த மகிழ்வுடன் தனது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திரு கிருபாநந்தன் நன்றி கூற விழா ஆண்டு விழா இனிது முடிந்தது.
வில்லுப்பாட்டு நிகழ்வு
  











சிறப்புரைகளின் ஒளிவடிவங்கள்::

 அசோகமித்திரன்.



இந்திரா பார்த்தசாரதி








நாடகத்தின் ஒளிவடிவம் :


No comments:

Post a Comment